மதுரை: அதிமுகவில் மூன்றாம் தலைமுறை நிர்வாகிகளை கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் கே.பழனிசாமி உருவாக்குவாரா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
அதிமுகவில் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு அடுத்து கே.பழனிசாமி தலைமை பொறுப்புக்கு வந்தநிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரே நபரிடம் பதவியும் அதிகாரமும் குவிந்து கிடப்பதால் மூன்றாம் தலைமுறை நிர்வாகிகள் உயர் பதவிகளுக்கு வர முடியாமல் தவிக்கிறார்கள்.